Sunday, October 23, 2011

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை - 24-10-2011- வெளியீடு.


சென்னை : அக்.21 - தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வரும் 24-ந் தேதி வெளியிடப்படுகிறது. பெயர்களை புதிதாக சேர்க்க, நீக்க வரும் அக்.30-ந் தேதி மற்றும் நவ.6-ந் தேதி இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
             1.1.2012-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
              24.10.2011 அன்று நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். www.elections.tn.gov.in/eroll என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்.  29.10.2011 மற்றும் 01.11.2011 ஆகிய நாட்களில் கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில்,  வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் / பிரிவு  ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

Saturday, October 22, 2011

மும்பையின் பிரதான சாலை சந்திப்புக்கு குலாம் முஹம்மத் பனாத்வாலா பெயரிடப்பட்டது.


மும்பை: மும்பை பிரதான சந்திப்பிற்கு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மறைந்த தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலாவின் பெயர் சூட்டப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் இ. அஹ்மது, முரளி தியோரா எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா சாஹிப் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர். 1965-ம் வருடத்தில் மும்பை சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களை சந்தித்து தாய்ச் சபையில் இணைந்தார்.

ஆசிரியராக பணி துவங்கிய ஜி.எம். பனாத்வாலா சாஹிப் இரண்டு முறை மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

அந்த காலகட்டத்தில் கருத்தடை சட்டம், வந்தே மாதரம் கட்டாயம் படிக்க வேண்டும் போன்ற சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர். எந்த ஒரு விஷயத்திலும் முழுமையான ஞானம் பெற்றவர். மிகச் சிறந்த பேச்சாளர். வாதத் திறமை மிக்கவர்.

2012ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள்


சென்னை: வரும் 2012ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டு செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வரும் 2012ம் தமிழகத்தில் 25 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஜனவரி 1 (ஞாயிறு) - புத்தாண்டு
ஜனவரி 15 (ஞாயிறு) - பொங்கல்
ஜனவரி 16 (திங்கள்) - திருவள்ளூவர் தினம்
ஜனவரி 17 (செவ்வாய்) - உழவர் திருநாள்
ஜனவரி 26 (வியாழன்) - குடியரசு தினம்
பிப்ரவரி 5 (ஞாயிறு) - மிலாடி நபி
மார்ச் 23 (வெள்ளி) - தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 2 (திங்கள்) - வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு
ஏப்ரல் 5 (வியாழன்) - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 6 (வெள்ளி) - புனித வெள்ளி
ஏப்ரல் 13 (வெள்ளி) - தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 14 (சனி) - மே தினம்
ஆகஸ்ட் 15 (புதன்) - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 (திங்கள்) - ரம்ஜான்
செப்டம்பர் 8 (சனி) - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 19 (புதன்) - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 29 (சனி) - வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு
அக்டோபர் 2 (செவ்வாய்) - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 23 (செவ்வாய்) - ஆயுத பூஜை
அக்டோபர் 24 (புதன்) - விஜய தசமி
அக்டோபர் 27 (சனி) - பக்ரீத்
நவம்பர் 13 (செவ்வாய்) - தீபாவளி
நவம்பர் 25 (ஞாயிறு) - முகரம்
டிசம்பர் 25 (செவ்வாய்) - கிறிஸ்துமஸ்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 16, 2011

வாக்கு சாவடி விபரங்கள்


அஸ்ஸலாமு அழைக்கும்,

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தினம் 17-1-2011 அன்று ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டு எண் 20-ல் அடங்கிய பண்டரவடையில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்கள் எந்தந்த வாக்கு சாவடியில் வாக்களிக்க வேண்டும் மற்றும் வாக்களிக்க வேண்டிய மற்றும் வாக்களிக்க வேண்டிய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரம்:

ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு   -  வெள்ளை நிறம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு      -   இளஞ்சிவப்பு நிறம்
ஒன்றியக்குழு உறுப்பினருக்கு   -    பச்சை நிறம்
மாவட்ட உறுப்பினருக்கு            -    மஞ்சள் நிறம்

வார்டு எண் தெருவின் பெயர் வாக்குசவடியின் பெயர்
    1
அக்கரையார் நகர்,காப்பி ரஸ்தா, கரைமேடு,தக்வா நகர், மெயின் ரோடு, லாடுகான் தைக்கால்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பண்டாரவாடை, சூபி நகர்
    3 தெற்குத்தெரு, மேலத்தெருகிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி,
    4 கீழத்தெரு தச்சன் தெரு வடக்குத்தெரு கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
    5 வடக்கு சின்னத்தெரு,
வர்ணத் தைக்கால்
கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
    7 பெரியத்தெரு கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
   8 கீழ சராங்குத்தெரு,சராங்குத்தெரு, நடுசந்து புதுத்தெரு, ரயிலடி தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பண்டாரவாடை,(வெங்காய கொல்லை)
    9 போஸ்ட் ஆபீஸ் தெரு மாதா கோவில் தெரு, லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பண்டாரவாடை,(வெங்காய கொல்லை)

ஊராட்சி தேர்தல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கடந்த சில நாட்களாக  தமிழ்நாடு எங்கும் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் இடுபட்டனர். நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று சுயேட்சை வேட்பாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் என்றே சொல்லலாம் வரலாறு காணாத அளவுக்கு இத்தேர்தலில் போட்டியிட்டனர். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க இத்தேர்தலில் எத்தனை வாக்களிக்கவேண்டும் என்று நம்மில் சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அறிந்துக்கொள்ள சிறுமுயற்சி. 

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும்.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை

   1. மாநகராட்சி
   2. நகராட்சி
   3. பேரூராட்சி
   4. ஊராட்சி

மாநகராட்சி மன்றம்

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாநகராட்சி மன்றத் தலைவர்களை (மேயர்) 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர். 
            2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் (துணை மேயர்) தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் 10 மாநகராட்சி மன்றங்கள் இருக்கின்றன.