தொகுதிக்கு போகாமலேயே தேர்தலில்வெற்றி பெற்றவரும்,எதிர் கட்சி தலைவர்களோடு மிக
நாகரிகமாக நட்பு பழகியவரும், காயிதே மில்லத்
என்று அன்போடு அழைக்கபட்ட முஸ்லிம் லீக்
தலைவர் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களை தமிழக தேர்தல் நடக்க போகும் இத்தருணத்தில்நினைவு கூறுகிறோம்.
நாகரிகமாக நட்பு பழகியவரும், காயிதே மில்லத்
என்று அன்போடு அழைக்கபட்ட முஸ்லிம் லீக்
தலைவர் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களை தமிழக தேர்தல் நடக்க போகும் இத்தருணத்தில்நினைவு கூறுகிறோம்.
இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப் அவர்கள். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.




