Monday, February 28, 2011

நம் தலைவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப்


தொகுதிக்கு போகாமலேயே தேர்தலில்வெற்றி பெற்றவரும்,எதிர் கட்சி தலைவர்களோடு மிக
நாகரிகமாக நட்பு பழகியவரும், காயிதே மில்லத்
என்று அன்போடு அழைக்கபட்ட முஸ்லிம் லீக்
தலைவர் முகம்மது இஸ்மாயில் சாகி
ப் அவர்களை தமிழக தேர்தல் நடக்க போகும் இத்தருணத்தில்நினைவு கூறுகிறோம்.


இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப் அவர்கள். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

             அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

Sunday, February 27, 2011

தமிழக சட்டசபைகளில் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலை


தமிழகத்தில் நடைபெற இருப்பது பதினான்காவது சட்ட சபை தேர்தல் ஆகும். இதுவரை சுதந்திர இந்தியாவில் பதிமூன்று முறை சட்ட சபை அமைத்து உள்ளார்கள் தமிழக மக்கள். தமிழ் நாடு மதராஸ் மகாணம் என்ற பெயரில் இருந்தபோதே நான்கு முறை தேர்தல் நடைபெற்று சட்ட சபையை  அமைத்து உள்ளனர் தமிழக மக்கள்.

         மதராஸ் மகாணம் என்ற பெயரில் இருந்தபோது 1952, 1957, 1962  மற்றும் 1967 ஆகிய ஆண்டுகள் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு முறை நடந்த சட்ட சபை தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளது.1952-ல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் இரண்டு மட்டுமே. 1957,1962 மற்றும் 1967-ல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் நான்கு மட்டுமே.

Friday, February 25, 2011

UCO Bank திறப்பு விழா



நமதூரில் உள்ள UCO Bank  நவீனபடுத்தும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இவ்வங்கியில் இந்நிலையில் பணிகள் முடிவடைந்து இன்று (24-02-2011) திறப்பு விழா கொண்டாப்பட்டது. வங்கியின் மேலாளர் திறந்துவைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Thursday, February 24, 2011

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க


Problem to read tamil in mobile?
  • kindly download the opera mini in http://www.opera.com/mini/ and install software.
  • Open the opera mini browser.
  • In address bar type "opera:config"
  • From "power user settings" choose use "bitmap fonts for complex scripts menu"
  • Make enable as "Yes" and save the setting.
  • Restart your opera mini.
  • Enjoy the tamil font on your mobile
Note : Screenshot are given below 

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் பிடிவிநவ்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.
                உங்களின் மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு 2011


                                வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.  மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். 
            தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. நேரடியாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும். விடைத்தாள், வினாத்தாள் ஆகியவையும் அச்சிடப்பட்டுவிட்டன. தேர்வு மையங்களைத் தேர்வு செய்வது, வினாத்தாள் தயாரிப்பது, ஹால் டிக்கெட் வழங்குவது என 3 மாதங்களாக தேர்வுத்துறை செய்துவந்த அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

                       தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்பது ஒவ்வரு பெற்றோர்களின் விருப்பம்.  தேர்வுகள் நெருங்கிய இவ்வேளையில் பிள்ளைகளை ஊக்குவித்து அதிகமதிப்பெண் எடுக்கவைப்பது பெற்றோர்களின் கடமை. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

                            

Friday, February 18, 2011

இஸ்லாமிய நூல்கள்


அஸ்ஸலாமு அழைக்கும், 

             இஸ்லாம் மார்கத்தை எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக சில முக்கிய நூல்களை இணைத்துளோம். இதில் அல்-குர்ஆன், ஸஹிஹ் புகாரி ( 7 பாகம்), ஸஹிஹ் முஸ்லிம் (தமிழ்), ஸஹிஹ் முஸ்லிம் (ஆங்கிலம்) ஆகும். இந்நூல்கள் மூலம் மார்க்க விசியத்தை அறிந்து ஈமானை பலப்படுத்துவோம். இதற்கு எல்லா வல்ல இறைவன் நமக்கு துனைபுரிவானாக.
 இந்நூல்களை download செய்து நாமும் படிப்போம் மற்றவர்க்கும் forward செய்வோம். 

Downloads 
அல்-குர்ஆன்

 ஸஹிஹ் புகாரி ( 7 பாகம்)

Monday, February 14, 2011

மலேசியாவில் காதலர் தினத்துக்கு தடை


கோலாலம்பூர் : 

காதலர் தினத்தை எதிர்த்து மாணவர்கள் கலந்துகொண்ட காட்சி 


காதலர் தினத்தை கொண்டாடுவதை தவிர்க்கும் படி முஸ்லிம்களுக்கு மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது. காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதலர் தின பரிசுப் பொருட்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. மலேசியாவில் மூன்று கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
                காதலர் தினம், இஸ்லாமிய மரபுக்கு எதிரானது என்பதால், இந்த கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி மலேசிய துணை பிரதமர் முய்ஹிதின் யாசின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், " காதலர் தினம் மேற்கத்திய நாட்டினரால் பின்பற்றப்படுவது. இதை மற்ற மதத்தினர் பின்பற்றுவதற்கும், கொண்டாடுவதற்கும் எந்த தடையும் இல்லை' என்றார்.
                 மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை தலைவர் அப்துல் அஜிஸ் குறிப்பிடுகையில், "இஸ்லாம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால், அந்த தினத்தின் பெயரில் நடக்கும் கொண்டாட்டங்கள் தான் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் மாணவர்கள் இந்த கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேற்கத்திய கலாசாரத்தில் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவற்றை பின்பற்றுகிறோம்' என்றார்.

பாபநாசம் தொகுதி ஒரு பார்வை


தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியை 1977 முதல் 2006 வரை காங்கிரசே தக்க வைத்து கொண்டுருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு நடந்து தேர்தலில் அ.தி.மு.க.-வை முதல் முதலாக வெற்றி பெற வைத்து காங்கிரஸ்க்கு அதிர்ச்சி கொடுத்தார்கள் பாபநாசம் தொகுதி இஸ்லாமிய மக்கள்.
     காங்கிரஸ் சார்பாக நின்ற ராம்குமார் கூட்டணி கட்சிகளை அனுசரித்து போகாததுதான் தோல்விக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் 1977 முதல் 2006 வரை காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாததின் விளைவுதான் ராம்குமார் தோர்க்கடிக்கப்படார் என்று மறைமுகமாகவும் பேசப்பட்டது. 

1977 முதல் 2006 வரை வெற்றி பெற்றவர்களின் விவரம்:

1977-------------------ஆர்.வி.சவுந்தர்ராஜன் (காங்)
1980-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1984-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1989-------------------ஜி.கருப்பையா மூப்பனார் (காங்)
1991-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1996------------------- கருப்பண்ண உடையார் (காங்)
2001------------------- ராம்குமார் (காங்)
2006------------------- ராம்குமார் (காங்) தோல்வி

www.ayyampettai.com


அஸ்ஸலாமு அழைக்கும்
                  அய்யம்பேட்டை சகோதரர்கள் தங்கள் ருக்காக www.ayyampettai.com என்ற புதிய இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார்கள். இணையதளத்தில் அவர்கள்  தங்கள் ஊரை  பற்றியும், ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வை பற்றியும் பதிவுசெய்ய உள்ளார்கள். அய்யம்பேட்டையில் நிகழும் நிகழ்வுகளை வெளிநாடுவாழ் மக்கள் அறிந்துக்கொள்ள சிறந்த இணையதளமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Wednesday, February 9, 2011

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்


இந்தியாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடில் கட்டப்படவுள்ளது.இந்த பிரமாண்டமான பள்ளிவாசலை சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்று அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
                      இந்த மிகப்பெரிய பள்ளிவாசல் முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படும் என்றும், பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் பள்ளிவாசல் வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும் என்றும் ரியாஸ் முகம்மது கூறினார். அடுத்த 5 மாத காலத்திற்குள் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படவுள்ளது.
 நன்றி : தினமணி

Pandaravadai Racing Pigeon Club (PRPC)


PRPC is established in 2010 in our village. Our objective is to develop and practice young homer pigeon for the top race event.  We have a pigeon for sales. 


Club Members
N.S. Mohamed Mubarark  (ABU)
M. Aburar Ahamed  - 8608648248
G. Mohamed Saleem - 9003878787

Pandaravadai Racing Pigeon Club (PRPC)
Pandaravadai - 614204,
Papanasam taluk,
Thanjavur district

PIGEON COLLECTION :
We have collection of (homer) racing pigeon, good breeders and young racers.
 Sample Images and videos :

Tuesday, February 8, 2011

Census 2011



நாட்டின் 15வது தேசிய  கணக்கெடுப்பு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம்  வரை நிறைவடைந்தது. இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புகள் அடங்கும். தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 9 பிப்ரவரி  2011 அதாவது நாளை தொடங்கி வரும் 28 பிப்ரவரி  2011 அன்று  நிறைவடைகிறது. அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை செய்யவுள்ளார்கள்.
                   இக்கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிப்பதனால் நம் சமுதாய மக்களுக்கு அரசாங்கம் சலுகைகள் அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிகாரிகள் கேட்கும் சில கேள்விகள் இதோ: 
  1. நபரின் பெயர், 
  2. குடும்பத்தலைவருக்கு உறவு முறை, 
  3. இனம், 
  4. பிறந்த தேதி ,
  5. தற்போது திருமண நிலை ,
  6. திருமணத்தின் பொது வயது, 

Monday, February 7, 2011

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கு 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இக்கல்வி தொகை 3  நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்படிப்புகள் வரை அடங்கும்.

1 - 10 வகுப்பு வரை :
தகுதிகள் :
  •   கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க  வேண்டும்.
  •   குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  •   வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.
  •   ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது.

பயன்கள் :
  •   கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்.
  •   சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்.
  •   விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு.
  •   கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்.
  •   ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி.

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
  1.   சாதி சான்றிதல் நகல் (xerox).
  2.   பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
  3.   வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்).

Saturday, February 5, 2011

Janaza News


அஸ்ஸலாமு அழைக்கும்
              பண்டாரவாடை பெரிய தெரு மணியாளி மைதீன் பாட்சா அவர்களின் மகளும், சாவத் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், முஹம்மத் பாருக் அவர்களின் தாயாரும், சுத்தி அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமான ரஹீமா பீவி அவர்கள் இன்று (05-02-2011) காலை காலமாகிவிட்டார்கள். 
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.

அறிந்துகொள்வோம் - I


  • தமிழ் நாட்டில் பிச்சைஎடுக்கும் குழந்தைகளை நீங்கள் கண்டால் RED SOCIETY- அணுகலாம். அங்கு அவர்களுக்கு கல்வியை தருகிறார்கள். RED SOCIETY- அணுக வேண்டிய தொலைபேசி எண் : 9940217816
  • ஊனமுற்ற மற்றும் இயலாத குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தாங்கும் விடுதி  போன்றவற்றை  இலவசமாக வழங்குகிறார்கள். அணுகவும்  :9842062501 & 9894067506.
  • பிறரது முக்கிய ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம், குடும்ப அடையாள அட்டை, கடவு சீட்டு (passport), வங்கி கணக்கு புத்தகம்  போன்ற ஆவணங்கள் உங்களிடம் கிடைத்தால் அதை அருகிலுள்ள தபால் பெட்டியில்  போடவும். ஆவணம் அவர்களிடம் சென்றடையும்.
  • இருதய கோளாறு உள்ள பத்து வயதுகுற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையை ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிடுயுட் வழங்குகிறார்கள்.             தொலைபேசி எண்  : 9916737471
  •  இமிடிநேப் மேர்சிலேட் (Imitinef Mercilet) என்ற மருந்து கேன்சரை குணப்படுத்தும். இம்மருந்து அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயுட் இலவசமாக தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு                                                                                                                 கேன்சர் இன்ஸ்டிடுயுட்,                                                                                                 ஈஸ்ட் கனல் பேங்க் ரோடு , காந்தி  நகர்
    அடையார்
    சென்னை  - 600020                                                                                                                        Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
    044-22350241 044-22350241

Wednesday, February 2, 2011

Railway Station



நமது ஊரில் உள்ள ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. மாணவர்கள் , வேலைக்கு செல்வோர் என அனைத்து தரபினற்கும் மிகவும் பயன்னுள்ளதாக விளங்கும் இந்நிலையத்தில் ஆறு பெசன்ஜர் (passenger) ரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. நமது ஊரை சுற்றயுள்ள கிராமங்களுக்கும் நமது ரயில் நிலையம் பயன்னுள்ளதாக இருப்பதனால் விரைவு வண்டி (Express)  போன்ற ரயில்கள் நின்று சென்றால் அனைத்து தரபினற்கும் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது மக்களின் கருத்து.