Tuesday, December 6, 2011

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் - முஸ்லிம் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்


பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று தமிழகமெங்கும் முஸ்லிம் இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10:30 மணியளவில் குடந்தை மீன் மார்க்கெட் முன் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்திற்கு முன்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தஞ்சை ரயில்நிலையம் முன் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Monday, December 5, 2011

ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்


தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு டூப்பர் எஜூகேஷன் எனப்படும் ஆன்லைன் கல்வியை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கிரேசெல் 18 நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை வழங்க பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் விரும்பும் துறை தொடர்பான பாடங்கள் வீடியோ மூலம் எடுக்கப்படும் ‌எனவும், ஆன்லைன் த...ேர்வுகளும் அதற்கான புத்தகங்கள் உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

Sunday, December 4, 2011

Hack செய்யப்பட்ட Facebook- கணக்கை திரும்ப பெறுவதற்கு-:(


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும் (facebook). சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.

பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் (Password) வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

சவுதியில் வசிக்கும் சகோதரர்களுக்காக..



தங்களுடைய இகாமா எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆறு மாத கால அவகாசம் முடிந்து புதிதாக கம்பெனி எந்த வகையில் உள்ளது என்பதை வெளியிட்டுள்ளார்கள்.

இனி எந்த கால அவகாசமும் இல்லையென்றும் இச்சட்டம் முஹர்ரம் 1 (26/11/11) முதல் அமுலுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது சவுதி அரசாங்கம்.

புதிய சாப்ட்வேர் பயிற்சி – ஆசிரியர்களுக்காக!


அரசு பொது தேர்வுகளில் மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று வழங்க, பள்ளிக் கல்வித்துறையால் புதிய சாபட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதற்காக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் போட்டோவுடன் மதிப்பெண் சான்று வெளியிட, இந்த ஆண்டு முதல் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Monday, November 28, 2011

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!


வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 

வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி...யுள்ளது.

சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

Saturday, November 26, 2011

தமிழகத்தில் மின் கட்டணம்: 'ஸ்லாப்' குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!


சென்னை: மின் கட்டணத்தை உயர்த்தக் கோரும் தமிழக அரசின் (மின் வாரியத்தின்) மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

வீடுகளுக்கு இதுவரை 7 'ஸ்லாப்புகளாக' பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதை இப்போது 4 'ஸ்லாப்புகளாக' குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை ஒரே 'ஸ்லாப்பாக' கணக்கிடப்பட உள்ளது.

இனிமேல் முதல் 100 யூனிட்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.50 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோர்க்கு ஒரு யூனிட்டுக்கான கட்டணம் ரூ. 2 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Friday, November 25, 2011

சைனிக் பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு!


அமராவதி சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் சைனிக் பள்ளி, திருப்பூர் அமராவதியில் உள்ளது. சி.பி.எஸ்.சி. மைய உயர் கல்விக் குழுவின் பாடத்திட்டத்தினைக் கொண்ட இப்பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இப்பள்ளியில், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தரமும் தகுதியுமிக்கவர்களாக ஆக்கும் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன்.

உங்கள் Password- இதில் இருக்கிறதா அப்படியென்றால் உங்கள் Account களவாட படலாம் !


இவ்வருடத்தின் மோசமான கடவுச்சொற்களைப் பிரபல நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. 
 
கடவுச்சொற்களை முகாமைத்துவம் செய்யும் அப்ளிகேஷனை உருவாக்கும் நிறுவனமொன்றே இவற்றை வெளியிட்டுள்ளது. பரந்த ஆய்வொன்றின் அடிப்படையிலேயே குறித்த நிறுவனம் இவ் அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளது. 

அதன்படி அதிகமாக ஹெக்கிங் செய்யப்பட்ட கடவுச் சொற்கள் இதோ.
1. password
2. 123456
3. 12345678
4. qwerty
5. abc123
6. monkey
7. 1234567
8. letmein

உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!


நல்ல ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிச்சயம் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா தென்மண்டலத் தலைவர் பி.ரவி.

கம்பெனி செக்ரட்டரி படிப்பு குறித்து ‘புதிய தலைமுறை கல்வி’க்கு அவர் அளித்த பேட்டி:

கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

Thursday, November 24, 2011

ஈரானுக்கெதிரான புதிய தடைகள்


அணுத்திட்ட சர்ச்சைகள் காரணமாக ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை மேற்குலக நாடுகள் அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனாடா ஆகிய நாடுகள் இந்த தடைகளை விதித்துள்ளன.

ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்


பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின்Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்) என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் ஃபிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது... குறிப்பிடத்தக்கது. வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோமதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.

Wednesday, November 23, 2011

Job Openings in Kuwait


Openings at Al Hamra Kuwait Co.,
Electrical Foreman Project Engineer - Structural Senior Accountant Project Engineer-Electrical Project Engineer - Instruments Project Engineer - Mechanical

Apply Online
http://www.hamrakt.com/apply_online.php

**************************
*********************************************************

Subject: Openings for Commissioning Engineer / QA/QC Manager for major EPC Projects in Oil & Gas Sector Kuwait

1. Commissioning Engineer/Manager
• More than 10 years of experience In Security System Installation
• Good Knowledge and field experience of Pre-Commissioning, Commissioning and Turnover Procedures

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்



கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.

நியாய விலை கடை இருக்கின்ற பொருள்களின் Status அறிய


உங்கள் நியாய விலை கடை (ரேஷன் கடை)  இருக்கின்ற பொருள்களின் அளவு   தெரிந்துகொள்ள ஆசையா? ஆம் என்றால்  

உங்க மொபைல்லில் இருந்து       [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] 

என்று  டைப் செய்து  9789006492, 9789005450 இந்த இரண்டு எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு SMS அனுப்பினால் போதும். நியாய விலை கடையினுள் இருக்கின்ற பொருள்களின் தகவல் உங்கள் மொபைல்லில்  உடனே கிடைக்கும்.

Tuesday, November 22, 2011

உலகின் மிகப்பெரிய குர்ஆன்!!!


உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் ரஷ்யாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இப்புனித நூலானது ரஷ்யாவின் கலாச்சார மற்றும் மரபுரிமைகள் நிதியத்தின் வேண்டுகோளிக்கு இணங்க இத்தாலியில் உருவாக்கப்பட்டதாகும்.
இரத்தினக்கற்களாலும்,தங்கத்தாலும் அழகுபடுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ரஷ்யாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புனித அல்குர்ஆனானது 800கிலோகிராம் எடை கொண்டதுடன் 632பக்கங்களைக் கொண்டுள்ளது.

PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி!


PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது. புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Monday, November 21, 2011

எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிவாய்ப்பு


இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ( பி.எஸ்.எப்.,) ஆகும். இந்த படையில் டெக்னிகல் பிரிவுகளான ஒர்க்ஸ் மற்றும் எலக்ட்ரிகலில் துணை கமாண்டண்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒர்க்ஸ் பிரிவில் 19 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: பி.எஸ்.எப்.,பின் இந்த இரண்டு பிரிவுகளுக்குமே குறைந்த பட்ச வயது 21ஆகவும், அதிக பட்ச வயது 26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது


இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அன்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். மாநிலம் முழுவதும் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை www.trb.tn.nic.in வெளியிட்டது.  மாநில பதிவு மூப்பு தகுதி அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் மொத்தம் 9,200 பேர் கொண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Sunday, November 20, 2011

முக்கிய அறிவிப்பு.........!!!



அஸ்ஸலாமு அழைக்கும்,

facebook-ல் கடந்த சில தினங்களாக இறைவனின் புனிதமிக்க ஆலயமான காபதுல்லா மீது ஆபாசம் நிறைந்த ஒரு பெண் அமர்ந்திருப்பது போலும்,  மற்றொரு புகைப்படத்தில் காபதுல்லா மீது பன்றி அமர்ந்திருப்பது போலும்,  நாய் கழிவது போலும் புகைப் படம் வெளியானது.

அதை கண்டவுடன் பல சகோதரர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.  நமக்கு விளங்குவது அந்த அசிங்கம் கொண்ட போட்டோவை UPLOAD செய்தவன், நாம் எவ்வளவு தூரம் கண்டிக்கிறோம் என்பது அவனுக்கு முக்கியமில்லை, 

எந்த அளவிற்கு பலரால் கண்டிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பபடுகிறது என்ற நோக்கத்திலேயே வெளியிடுகிறான்.

எனவே சகோதரர்கள் யாவரும் இது மாதிரியான போட்டோவிற்கு SHARE அல்லது COMMENTS எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது. 

ஏனெனில் நீங்கள் அந்த போட்டோவிற்கு COMMENTS கொடுக்கும் போது உங்களுடைய அனைத்து நண்பர்களுக்கும் சென்றுவிடுகிறது.

அந்த மிருகத்தின் நோக்கமும் அதுவே தான்...!!

நீங்கள் அந்த புகைப்படத்தை காணும் போது உங்களுடைய உணர்சிகளை கட்டுபடுத்தி

அந்த படத்திற்கு அருகில் உள்ள அம்புக்குறியை தேர்வு செய்து அதிலுள்ள Report Story or spam என்பதை click செய்து விடவும்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

இளைஞர்களே ! நீங்களும் பத்திரிகை துறையில் அங்கம் வகிக்க வேண்டுமா !! உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு !!!



சமுதாய சொந்தங்களே...!

அஸ்ஸலாமு அலைக்கும்....

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சமுதாயம் தன்னுடைய வரலாறு தெரியாமல் வாழ்ந்து வருகிறது.

ஆங்கிலேயர்களை விரட்டி அடித்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இன்று அவை மறைக்கப்படுகிறது.

அதுமட்டும் அல்ல உலகிற்கு நன்மை செய்யும் முஸ்லிம்கள் பற்றியும் மறைக்கப்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணம் முஸ்லிம்களாகிய நாம் கூர்மை கொண்ட பத்திரிக்கை துறையில் இல்லாத ஒன்று தான்.




பத்திரிக்கை துறையில் நாம் இருந்தால், உண்மை செய்திகளை கொண்டு, நமது சமுதாய எழுச்சிக்கு வித்திடலாம். சுதந்திர தினத்தில் மருதநாயகம், திப்பு சுல்தான் போன்றவர்கள் வரலாற்றை கூறலாம். ஆவணப்படம் எடுத்து, இன்று முஸ்லிம்கள், உலக அரங்கில் படக்கூடிய கஷ்டங்களை சொல்லலாம். செய்யாத தவறுக்காக பல ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றியும், அவர்கள் குடும்பம் படும் இன்னல்கள் பற்றியும் எடுத்து சொல்லக்கூடிய கூர்மை ஆயுதம், இந்த காட்சி ஊடகமான பத்திரிக்கை துறை.

Saturday, November 19, 2011

பேருந்து மற்றும் பால் கட்டணம் உயர்வால் மக்கள் பெரும் அவதி


தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பேருந்து  கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி அரசு அறிவித்து இருக்கிறது.  போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய முதலமைச்சர் நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார்.


வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு அன்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளது.  சென்னையில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.  நகர பேருந்து கட்டணம் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

JBS Association - இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அஸ்ஸலாமு அழைக்கும்,

நமதூரில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுருக்கும் JBS Association வட்டி இல்லா கடன் வழங்கும் நிறுவனம் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலத்தெருவில் புதிதாக அமைந்துள்ள கட்டிடத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். இனி வரும் காலங்களில் அனைத்து பரிமாற்றங்களும் மேலத்தெருவில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் நடைபெறும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆதார் அடையாள அட்டை விண்ணப்பங்கள் 21ம் தேதி தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் தொடக்கம்


இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள் பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும் மருத்துவத்துக்கும் மொபைல் போன் இணைப்பு பெறவும் இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

Friday, November 18, 2011

ஹிஜ்ரி இஸ்லாமிய காலேண்டர் - சிறப்பு பார்வை


உலகில் தற்போது 40 காலண்டர்கள் உபயோகத்தில் உள்ளன. அதை பற்றிய சிறிய தொகுப்பு. பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள்  பெரும்பாலும் செப்டெம்பர் மாதத்தை புதுவருடமாக கருதினர். பாபிலோனியர்கள் வசந்த காலத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் நீண்ட காலமாக புதுவருடமாக கருதினர். இவர் தான் கலண்டரை வடிவமைப்புச் செய்தவர்கள். அப்போது வருடத்திற்குப் பத்து மாதங்களே வரையறை செய்தனர்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவை அமைந்திருந்தன. பின் கி.மு. 713-இல் தான் ஜனவரியும் பிப்ரவரியும் லீப் வருடமும் சேர்க்கப்பட்டன. அப்போதும் மார்ச்சிலேயே துவங்கிவந்த வருடம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் படி மாற்றப்பட்டது.

Thursday, November 17, 2011

உமர் முக்தார் ( Lion of Desert ) (1862 – செப்டம்பர் 16, 1931)


மர் முக்தார்…! பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம் .


             உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

Tuesday, November 15, 2011

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்.


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.

Sunday, October 23, 2011

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை - 24-10-2011- வெளியீடு.


சென்னை : அக்.21 - தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வரும் 24-ந் தேதி வெளியிடப்படுகிறது. பெயர்களை புதிதாக சேர்க்க, நீக்க வரும் அக்.30-ந் தேதி மற்றும் நவ.6-ந் தேதி இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
             1.1.2012-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
              24.10.2011 அன்று நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். www.elections.tn.gov.in/eroll என்ற வலைதளத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்.  29.10.2011 மற்றும் 01.11.2011 ஆகிய நாட்களில் கிராம சபை / உள்ளாட்சி மன்றம் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில்,  வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகம் / பிரிவு  ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

Saturday, October 22, 2011

மும்பையின் பிரதான சாலை சந்திப்புக்கு குலாம் முஹம்மத் பனாத்வாலா பெயரிடப்பட்டது.


மும்பை: மும்பை பிரதான சந்திப்பிற்கு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மறைந்த தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலாவின் பெயர் சூட்டப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் இ. அஹ்மது, முரளி தியோரா எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா சாஹிப் மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர். 1965-ம் வருடத்தில் மும்பை சென்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் அவர்களை சந்தித்து தாய்ச் சபையில் இணைந்தார்.

ஆசிரியராக பணி துவங்கிய ஜி.எம். பனாத்வாலா சாஹிப் இரண்டு முறை மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

அந்த காலகட்டத்தில் கருத்தடை சட்டம், வந்தே மாதரம் கட்டாயம் படிக்க வேண்டும் போன்ற சட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போன்ற போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர். எந்த ஒரு விஷயத்திலும் முழுமையான ஞானம் பெற்றவர். மிகச் சிறந்த பேச்சாளர். வாதத் திறமை மிக்கவர்.

2012ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள்


சென்னை: வரும் 2012ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டு செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வரும் 2012ம் தமிழகத்தில் 25 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

ஜனவரி 1 (ஞாயிறு) - புத்தாண்டு
ஜனவரி 15 (ஞாயிறு) - பொங்கல்
ஜனவரி 16 (திங்கள்) - திருவள்ளூவர் தினம்
ஜனவரி 17 (செவ்வாய்) - உழவர் திருநாள்
ஜனவரி 26 (வியாழன்) - குடியரசு தினம்
பிப்ரவரி 5 (ஞாயிறு) - மிலாடி நபி
மார்ச் 23 (வெள்ளி) - தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 2 (திங்கள்) - வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு
ஏப்ரல் 5 (வியாழன்) - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 6 (வெள்ளி) - புனித வெள்ளி
ஏப்ரல் 13 (வெள்ளி) - தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 14 (சனி) - மே தினம்
ஆகஸ்ட் 15 (புதன்) - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 (திங்கள்) - ரம்ஜான்
செப்டம்பர் 8 (சனி) - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 19 (புதன்) - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 29 (சனி) - வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு
அக்டோபர் 2 (செவ்வாய்) - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 23 (செவ்வாய்) - ஆயுத பூஜை
அக்டோபர் 24 (புதன்) - விஜய தசமி
அக்டோபர் 27 (சனி) - பக்ரீத்
நவம்பர் 13 (செவ்வாய்) - தீபாவளி
நவம்பர் 25 (ஞாயிறு) - முகரம்
டிசம்பர் 25 (செவ்வாய்) - கிறிஸ்துமஸ்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 16, 2011

வாக்கு சாவடி விபரங்கள்


அஸ்ஸலாமு அழைக்கும்,

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தினம் 17-1-2011 அன்று ஒன்றியக்குழு உறுப்பினர் வார்டு எண் 20-ல் அடங்கிய பண்டரவடையில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்கள் எந்தந்த வாக்கு சாவடியில் வாக்களிக்க வேண்டும் மற்றும் வாக்களிக்க வேண்டிய மற்றும் வாக்களிக்க வேண்டிய வேட்பாளர்களின் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரம்:

ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு   -  வெள்ளை நிறம்
ஊராட்சி மன்ற தலைவருக்கு      -   இளஞ்சிவப்பு நிறம்
ஒன்றியக்குழு உறுப்பினருக்கு   -    பச்சை நிறம்
மாவட்ட உறுப்பினருக்கு            -    மஞ்சள் நிறம்

வார்டு எண் தெருவின் பெயர் வாக்குசவடியின் பெயர்
    1
அக்கரையார் நகர்,காப்பி ரஸ்தா, கரைமேடு,தக்வா நகர், மெயின் ரோடு, லாடுகான் தைக்கால்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பண்டாரவாடை, சூபி நகர்
    3 தெற்குத்தெரு, மேலத்தெருகிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி,
    4 கீழத்தெரு தச்சன் தெரு வடக்குத்தெரு கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
    5 வடக்கு சின்னத்தெரு,
வர்ணத் தைக்கால்
கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
    7 பெரியத்தெரு கிரசண்ட் மெட்ரிகுலேஷன் மே.நி.பள்ளி
   8 கீழ சராங்குத்தெரு,சராங்குத்தெரு, நடுசந்து புதுத்தெரு, ரயிலடி தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பண்டாரவாடை,(வெங்காய கொல்லை)
    9 போஸ்ட் ஆபீஸ் தெரு மாதா கோவில் தெரு, லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பண்டாரவாடை,(வெங்காய கொல்லை)

ஊராட்சி தேர்தல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கடந்த சில நாட்களாக  தமிழ்நாடு எங்கும் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் இடுபட்டனர். நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று சுயேட்சை வேட்பாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் என்றே சொல்லலாம் வரலாறு காணாத அளவுக்கு இத்தேர்தலில் போட்டியிட்டனர். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க இத்தேர்தலில் எத்தனை வாக்களிக்கவேண்டும் என்று நம்மில் சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அறிந்துக்கொள்ள சிறுமுயற்சி. 

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும்.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை

   1. மாநகராட்சி
   2. நகராட்சி
   3. பேரூராட்சி
   4. ஊராட்சி

மாநகராட்சி மன்றம்

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாநகராட்சி மன்றத் தலைவர்களை (மேயர்) 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர். 
            2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் (துணை மேயர்) தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் 10 மாநகராட்சி மன்றங்கள் இருக்கின்றன.

Saturday, June 25, 2011

29-ம் தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது





                              இந்தியாவில் வரும் 29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது. இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நாணயங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் புது போலிவுடன் மீண்டும் புது போலிவுடன் :pdvnow.com


அஸ்ஸலாமு அழைக்கும்

                      சில தவிர்க்க முடியாத காரணங்களால் www.pdvnow.com என்ற இணையதளத்தை சரி வர இயக்க முடியவில்லை அதற்காக நாம் இங்கே வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இத்தகைய தவறு நடைபெறாமல் இருக்க முயற்சிசெய்கிறோம். இந்இணையத்தளம் மென்மேலும் வளர அனைவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.மேலும் எத்தகைய தடையும் இல்லாமல் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.   

Saturday, March 5, 2011

வாக்காளர் அட்டை: மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்த்தல் ,பெயர் திருத்தும் போன்றவற்றை மார்ச் வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நமதூரை சார்ந்த மக்கள் பாபநாசத்தில் உள்ள தாலுகா அழுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
 

Wednesday, March 2, 2011

பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்குகிறது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ந் தேதி இன்று தொடங்கி 28 ந் தேதியுடன் முடிவடைகிறது. பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். நமதூரில் உள்ள கிரசென்ட் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு 24 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

                         தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துண்டு சீட்டு வைத்திருத்தல், அடுத்த மாணவரை பார்த்து எழுத முயற்சி செய்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடத்தல், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் ஆகியவை குற்றமாகும். 

Monday, February 28, 2011

நம் தலைவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப்


தொகுதிக்கு போகாமலேயே தேர்தலில்வெற்றி பெற்றவரும்,எதிர் கட்சி தலைவர்களோடு மிக
நாகரிகமாக நட்பு பழகியவரும், காயிதே மில்லத்
என்று அன்போடு அழைக்கபட்ட முஸ்லிம் லீக்
தலைவர் முகம்மது இஸ்மாயில் சாகி
ப் அவர்களை தமிழக தேர்தல் நடக்க போகும் இத்தருணத்தில்நினைவு கூறுகிறோம்.


இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப் அவர்கள். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

             அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

Sunday, February 27, 2011

தமிழக சட்டசபைகளில் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலை


தமிழகத்தில் நடைபெற இருப்பது பதினான்காவது சட்ட சபை தேர்தல் ஆகும். இதுவரை சுதந்திர இந்தியாவில் பதிமூன்று முறை சட்ட சபை அமைத்து உள்ளார்கள் தமிழக மக்கள். தமிழ் நாடு மதராஸ் மகாணம் என்ற பெயரில் இருந்தபோதே நான்கு முறை தேர்தல் நடைபெற்று சட்ட சபையை  அமைத்து உள்ளனர் தமிழக மக்கள்.

         மதராஸ் மகாணம் என்ற பெயரில் இருந்தபோது 1952, 1957, 1962  மற்றும் 1967 ஆகிய ஆண்டுகள் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு முறை நடந்த சட்ட சபை தேர்தலில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளது.1952-ல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் இரண்டு மட்டுமே. 1957,1962 மற்றும் 1967-ல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினர் நான்கு மட்டுமே.

Friday, February 25, 2011

UCO Bank திறப்பு விழா



நமதூரில் உள்ள UCO Bank  நவீனபடுத்தும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இவ்வங்கியில் இந்நிலையில் பணிகள் முடிவடைந்து இன்று (24-02-2011) திறப்பு விழா கொண்டாப்பட்டது. வங்கியின் மேலாளர் திறந்துவைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Thursday, February 24, 2011

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க


Problem to read tamil in mobile?
  • kindly download the opera mini in http://www.opera.com/mini/ and install software.
  • Open the opera mini browser.
  • In address bar type "opera:config"
  • From "power user settings" choose use "bitmap fonts for complex scripts menu"
  • Make enable as "Yes" and save the setting.
  • Restart your opera mini.
  • Enjoy the tamil font on your mobile
Note : Screenshot are given below 

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் பிடிவிநவ்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.
                உங்களின் மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு 2011


                                வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.  மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். 
            தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. நேரடியாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும். விடைத்தாள், வினாத்தாள் ஆகியவையும் அச்சிடப்பட்டுவிட்டன. தேர்வு மையங்களைத் தேர்வு செய்வது, வினாத்தாள் தயாரிப்பது, ஹால் டிக்கெட் வழங்குவது என 3 மாதங்களாக தேர்வுத்துறை செய்துவந்த அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

                       தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்பது ஒவ்வரு பெற்றோர்களின் விருப்பம்.  தேர்வுகள் நெருங்கிய இவ்வேளையில் பிள்ளைகளை ஊக்குவித்து அதிகமதிப்பெண் எடுக்கவைப்பது பெற்றோர்களின் கடமை. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

                            

Friday, February 18, 2011

இஸ்லாமிய நூல்கள்


அஸ்ஸலாமு அழைக்கும், 

             இஸ்லாம் மார்கத்தை எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக சில முக்கிய நூல்களை இணைத்துளோம். இதில் அல்-குர்ஆன், ஸஹிஹ் புகாரி ( 7 பாகம்), ஸஹிஹ் முஸ்லிம் (தமிழ்), ஸஹிஹ் முஸ்லிம் (ஆங்கிலம்) ஆகும். இந்நூல்கள் மூலம் மார்க்க விசியத்தை அறிந்து ஈமானை பலப்படுத்துவோம். இதற்கு எல்லா வல்ல இறைவன் நமக்கு துனைபுரிவானாக.
 இந்நூல்களை download செய்து நாமும் படிப்போம் மற்றவர்க்கும் forward செய்வோம். 

Downloads 
அல்-குர்ஆன்

 ஸஹிஹ் புகாரி ( 7 பாகம்)

Monday, February 14, 2011

மலேசியாவில் காதலர் தினத்துக்கு தடை


கோலாலம்பூர் : 

காதலர் தினத்தை எதிர்த்து மாணவர்கள் கலந்துகொண்ட காட்சி 


காதலர் தினத்தை கொண்டாடுவதை தவிர்க்கும் படி முஸ்லிம்களுக்கு மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது. காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதலர் தின பரிசுப் பொருட்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. மலேசியாவில் மூன்று கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
                காதலர் தினம், இஸ்லாமிய மரபுக்கு எதிரானது என்பதால், இந்த கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி மலேசிய துணை பிரதமர் முய்ஹிதின் யாசின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், " காதலர் தினம் மேற்கத்திய நாட்டினரால் பின்பற்றப்படுவது. இதை மற்ற மதத்தினர் பின்பற்றுவதற்கும், கொண்டாடுவதற்கும் எந்த தடையும் இல்லை' என்றார்.
                 மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை தலைவர் அப்துல் அஜிஸ் குறிப்பிடுகையில், "இஸ்லாம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால், அந்த தினத்தின் பெயரில் நடக்கும் கொண்டாட்டங்கள் தான் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, முஸ்லிம் மாணவர்கள் இந்த கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேற்கத்திய கலாசாரத்தில் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவற்றை பின்பற்றுகிறோம்' என்றார்.

பாபநாசம் தொகுதி ஒரு பார்வை


தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியை 1977 முதல் 2006 வரை காங்கிரசே தக்க வைத்து கொண்டுருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு நடந்து தேர்தலில் அ.தி.மு.க.-வை முதல் முதலாக வெற்றி பெற வைத்து காங்கிரஸ்க்கு அதிர்ச்சி கொடுத்தார்கள் பாபநாசம் தொகுதி இஸ்லாமிய மக்கள்.
     காங்கிரஸ் சார்பாக நின்ற ராம்குமார் கூட்டணி கட்சிகளை அனுசரித்து போகாததுதான் தோல்விக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் 1977 முதல் 2006 வரை காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாததின் விளைவுதான் ராம்குமார் தோர்க்கடிக்கப்படார் என்று மறைமுகமாகவும் பேசப்பட்டது. 

1977 முதல் 2006 வரை வெற்றி பெற்றவர்களின் விவரம்:

1977-------------------ஆர்.வி.சவுந்தர்ராஜன் (காங்)
1980-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1984-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1989-------------------ஜி.கருப்பையா மூப்பனார் (காங்)
1991-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1996------------------- கருப்பண்ண உடையார் (காங்)
2001------------------- ராம்குமார் (காங்)
2006------------------- ராம்குமார் (காங்) தோல்வி

www.ayyampettai.com


அஸ்ஸலாமு அழைக்கும்
                  அய்யம்பேட்டை சகோதரர்கள் தங்கள் ருக்காக www.ayyampettai.com என்ற புதிய இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார்கள். இணையதளத்தில் அவர்கள்  தங்கள் ஊரை  பற்றியும், ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வை பற்றியும் பதிவுசெய்ய உள்ளார்கள். அய்யம்பேட்டையில் நிகழும் நிகழ்வுகளை வெளிநாடுவாழ் மக்கள் அறிந்துக்கொள்ள சிறந்த இணையதளமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Wednesday, February 9, 2011

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்


இந்தியாவின் மிகப் பெரிய பள்ளிவாசல் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடில் கட்டப்படவுள்ளது.இந்த பிரமாண்டமான பள்ளிவாசலை சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்று அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளர் ரியாஸ் முகம்மது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
                      இந்த மிகப்பெரிய பள்ளிவாசல் முகலாயர் கால கட்டடப் பாணியில் அமைக்கப்படும் என்றும், பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். மேலும், கருத்தரங்கு நடத்துவதற்கான ஆடிட்டோரியம் மற்றும் பெரிய நூலகமும் பள்ளிவாசல் வளாகத்தி்ல் கட்டப்படும் என்றும், 1000 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்படும் என்றும் ரியாஸ் முகம்மது கூறினார். அடுத்த 5 மாத காலத்திற்குள் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படவுள்ளது.
 நன்றி : தினமணி

Pandaravadai Racing Pigeon Club (PRPC)


PRPC is established in 2010 in our village. Our objective is to develop and practice young homer pigeon for the top race event.  We have a pigeon for sales. 


Club Members
N.S. Mohamed Mubarark  (ABU)
M. Aburar Ahamed  - 8608648248
G. Mohamed Saleem - 9003878787

Pandaravadai Racing Pigeon Club (PRPC)
Pandaravadai - 614204,
Papanasam taluk,
Thanjavur district

PIGEON COLLECTION :
We have collection of (homer) racing pigeon, good breeders and young racers.
 Sample Images and videos :

Tuesday, February 8, 2011

Census 2011



நாட்டின் 15வது தேசிய  கணக்கெடுப்பு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம்  வரை நிறைவடைந்தது. இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புகள் அடங்கும். தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 9 பிப்ரவரி  2011 அதாவது நாளை தொடங்கி வரும் 28 பிப்ரவரி  2011 அன்று  நிறைவடைகிறது. அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை செய்யவுள்ளார்கள்.
                   இக்கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிப்பதனால் நம் சமுதாய மக்களுக்கு அரசாங்கம் சலுகைகள் அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிகாரிகள் கேட்கும் சில கேள்விகள் இதோ: 
  1. நபரின் பெயர், 
  2. குடும்பத்தலைவருக்கு உறவு முறை, 
  3. இனம், 
  4. பிறந்த தேதி ,
  5. தற்போது திருமண நிலை ,
  6. திருமணத்தின் பொது வயது, 

Monday, February 7, 2011

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கு 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இக்கல்வி தொகை 3  நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்படிப்புகள் வரை அடங்கும்.

1 - 10 வகுப்பு வரை :
தகுதிகள் :
  •   கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க  வேண்டும்.
  •   குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  •   வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.
  •   ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது.

பயன்கள் :
  •   கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்.
  •   சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்.
  •   விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு.
  •   கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்.
  •   ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி.

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
  1.   சாதி சான்றிதல் நகல் (xerox).
  2.   பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
  3.   வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்).

Saturday, February 5, 2011

Janaza News


அஸ்ஸலாமு அழைக்கும்
              பண்டாரவாடை பெரிய தெரு மணியாளி மைதீன் பாட்சா அவர்களின் மகளும், சாவத் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், முஹம்மத் பாருக் அவர்களின் தாயாரும், சுத்தி அப்துல் வஹாப் அவர்களின் மாமியாருமான ரஹீமா பீவி அவர்கள் இன்று (05-02-2011) காலை காலமாகிவிட்டார்கள். 
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.

அறிந்துகொள்வோம் - I


  • தமிழ் நாட்டில் பிச்சைஎடுக்கும் குழந்தைகளை நீங்கள் கண்டால் RED SOCIETY- அணுகலாம். அங்கு அவர்களுக்கு கல்வியை தருகிறார்கள். RED SOCIETY- அணுக வேண்டிய தொலைபேசி எண் : 9940217816
  • ஊனமுற்ற மற்றும் இயலாத குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தாங்கும் விடுதி  போன்றவற்றை  இலவசமாக வழங்குகிறார்கள். அணுகவும்  :9842062501 & 9894067506.
  • பிறரது முக்கிய ஆவணங்கள் ஓட்டுனர் உரிமம், குடும்ப அடையாள அட்டை, கடவு சீட்டு (passport), வங்கி கணக்கு புத்தகம்  போன்ற ஆவணங்கள் உங்களிடம் கிடைத்தால் அதை அருகிலுள்ள தபால் பெட்டியில்  போடவும். ஆவணம் அவர்களிடம் சென்றடையும்.
  • இருதய கோளாறு உள்ள பத்து வயதுகுற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையை ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிடுயுட் வழங்குகிறார்கள்.             தொலைபேசி எண்  : 9916737471
  •  இமிடிநேப் மேர்சிலேட் (Imitinef Mercilet) என்ற மருந்து கேன்சரை குணப்படுத்தும். இம்மருந்து அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயுட் இலவசமாக தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு                                                                                                                 கேன்சர் இன்ஸ்டிடுயுட்,                                                                                                 ஈஸ்ட் கனல் பேங்க் ரோடு , காந்தி  நகர்
    அடையார்
    சென்னை  - 600020                                                                                                                        Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
    044-22350241 044-22350241

Wednesday, February 2, 2011

Railway Station



நமது ஊரில் உள்ள ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. மாணவர்கள் , வேலைக்கு செல்வோர் என அனைத்து தரபினற்கும் மிகவும் பயன்னுள்ளதாக விளங்கும் இந்நிலையத்தில் ஆறு பெசன்ஜர் (passenger) ரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. நமது ஊரை சுற்றயுள்ள கிராமங்களுக்கும் நமது ரயில் நிலையம் பயன்னுள்ளதாக இருப்பதனால் விரைவு வண்டி (Express)  போன்ற ரயில்கள் நின்று சென்றால் அனைத்து தரபினற்கும் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும் என்பது மக்களின் கருத்து. 

Friday, January 28, 2011

Janaaza News


அஸ்ஸலாமு அழைக்கும்

பண்டாரவாடை மர்ஹூம் மணியாளி அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் விரான்செரி அப்துல்லா அவர்களின் மனைவியும் சூபி நகர் சித்திக், யூசுப் நகர் ஜாபர் அவர்களின் தாயாருமான ஹாபிபுநிஷா அவர்கள்  27-1-2011 அன்று  காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.

Thursday, January 27, 2011

இலவச கணினி பயிற்சி



சிறுபான்மை மாணவர்களுக்காக TAMCO வழங்கும் இலவச கணினி பயிற்சி. இதில் MS Office with C, C++, MS Office with Tally ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபக்ச தகுதி 10th பாஸ் அல்லது பெயில். இச்சலுகை சுமார் 10500 மாணவர்களுக்கு வழங்கப்படயிருக்கிறது. 

Wednesday, January 26, 2011

Happy Republic Day


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

Tuesday, January 25, 2011

தேசிய வாக்காளர் தினம்


நாடு முழுவதும் வாக்காளர் தினம் ஜனவரி 25 செவ்வாய்கிழமை இன்று இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 தேதி தோற்றிவிக்கப்பட்டதால் இந்நாளை நினைவுகூரும் விதமாக "தேசிய வாக்காளர் தினமாக" ஒவ்வரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வேன்! வாக்களிக்க தயார் ஆவேன்!! என்ற முழக்கத்துடன் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடி வருகிறது.