Tuesday, December 6, 2011

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் - முஸ்லிம் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்


பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று தமிழகமெங்கும் முஸ்லிம் இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10:30 மணியளவில் குடந்தை மீன் மார்க்கெட் முன் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்திற்கு முன்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தஞ்சை ரயில்நிலையம் முன் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Monday, December 5, 2011

ஆன்லைனில் கல்வி சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்


தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு டூப்பர் எஜூகேஷன் எனப்படும் ஆன்லைன் கல்வியை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. கிரேசெல் 18 நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை வழங்க பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் விரும்பும் துறை தொடர்பான பாடங்கள் வீடியோ மூலம் எடுக்கப்படும் ‌எனவும், ஆன்லைன் த...ேர்வுகளும் அதற்கான புத்தகங்கள் உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

Sunday, December 4, 2011

Hack செய்யப்பட்ட Facebook- கணக்கை திரும்ப பெறுவதற்கு-:(


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும் (facebook). சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.

பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் (Password) வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

சவுதியில் வசிக்கும் சகோதரர்களுக்காக..



தங்களுடைய இகாமா எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆறு மாத கால அவகாசம் முடிந்து புதிதாக கம்பெனி எந்த வகையில் உள்ளது என்பதை வெளியிட்டுள்ளார்கள்.

இனி எந்த கால அவகாசமும் இல்லையென்றும் இச்சட்டம் முஹர்ரம் 1 (26/11/11) முதல் அமுலுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளது சவுதி அரசாங்கம்.

புதிய சாப்ட்வேர் பயிற்சி – ஆசிரியர்களுக்காக!


அரசு பொது தேர்வுகளில் மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று வழங்க, பள்ளிக் கல்வித்துறையால் புதிய சாபட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதற்காக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் போட்டோவுடன் மதிப்பெண் சான்று வெளியிட, இந்த ஆண்டு முதல் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.