Saturday, March 5, 2011

வாக்காளர் அட்டை: மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க மார்ச் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்த்தல் ,பெயர் திருத்தும் போன்றவற்றை மார்ச் வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நமதூரை சார்ந்த மக்கள் பாபநாசத்தில் உள்ள தாலுகா அழுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
 

Wednesday, March 2, 2011

பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்குகிறது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ந் தேதி இன்று தொடங்கி 28 ந் தேதியுடன் முடிவடைகிறது. பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். நமதூரில் உள்ள கிரசென்ட் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு 24 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

                         தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துண்டு சீட்டு வைத்திருத்தல், அடுத்த மாணவரை பார்த்து எழுத முயற்சி செய்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடத்தல், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் ஆகியவை குற்றமாகும்.