அஸ்ஸலாமு அழைக்கும்,
facebook-ல் கடந்த சில தினங்களாக இறைவனின் புனிதமிக்க ஆலயமான காபதுல்லா மீது ஆபாசம் நிறைந்த ஒரு பெண் அமர்ந்திருப்பது போலும், மற்றொரு புகைப்படத்தில் காபதுல்லா மீது பன்றி அமர்ந்திருப்பது போலும், நாய் கழிவது போலும் புகைப் படம் வெளியானது.
அதை கண்டவுடன் பல சகோதரர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். நமக்கு விளங்குவது அந்த அசிங்கம் கொண்ட போட்டோவை UPLOAD செய்தவன், நாம் எவ்வளவு தூரம் கண்டிக்கிறோம் என்பது அவனுக்கு முக்கியமில்லை,
எந்த அளவிற்கு பலரால் கண்டிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பபடுகிறது என்ற நோக்கத்திலேயே வெளியிடுகிறான்.
எனவே சகோதரர்கள் யாவரும் இது மாதிரியான போட்டோவிற்கு SHARE அல்லது COMMENTS எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது.
ஏனெனில் நீங்கள் அந்த போட்டோவிற்கு COMMENTS கொடுக்கும் போது உங்களுடைய அனைத்து நண்பர்களுக்கும் சென்றுவிடுகிறது.
அந்த மிருகத்தின் நோக்கமும் அதுவே தான்...!!
நீங்கள் அந்த புகைப்படத்தை காணும் போது உங்களுடைய உணர்சிகளை கட்டுபடுத்தி
அந்த படத்திற்கு அருகில் உள்ள அம்புக்குறியை தேர்வு செய்து அதிலுள்ள Report Story or spam என்பதை click செய்து விடவும்.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!